திவாகரனுடன் மோதல் எதிரொலி: சசிகலாவை சந்திக்கின்றார் தினகரன்

Webdunia
வியாழன், 3 மே 2018 (08:45 IST)
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி மீது ஏற்கனவே அவரது ஆதரவாளர்களே அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தன்னுடைய கட்சிக்கு தனது உறவினர்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
நாளை மறுநாள் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் தினகரன் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிமுக, திவாகரன் அணி, மட்டுமின்றி திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆவலுடன் இருப்பதாக தெரிகிறது. தினகரன் மற்றும் சசிகலா சந்திப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments