Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குகள் விற்கப்பட்டதால் தான் தினகரனுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது; தமிழிசை சௌந்தர்ராஜன்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (12:23 IST)
சென்னை ஆர்கே நகரில் வாக்குகள் விற்கப்பட்டதால் தான் தினகரன் வெற்றி பெற முடிந்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஜ்பாயின் 93-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றது தேர்தலே அல்ல என்றார். தேர்தல் ஆணையம் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கத் தவறியதாலேயே தினகரன் வெற்றி அடைந்திருப்பதாக அவர் கூறினார். ஆர்கே நகரில் தினகரனுக்கு கிடைத்த வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்றும் ஆர்.கே.நகரில் பாஜக தோல்வியடைந்ததைப் பற்றி  கவலைப்படவில்லை என்றும் மக்களிடம் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எடுத்து சொல்லி தமிழகத்தில் வலு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments