Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்- 21 குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை

dig vijayakumar
, வெள்ளி, 7 ஜூலை 2023 (20:41 IST)
கோவை சகர காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.   இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார்  தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின்  உடலை மீட்டு  உடற்கூறு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு, அவர் மன அழுத்தத்தில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இவரது மறைவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி  காவல்துறை உயரதிகாரிகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் அடக்கம் செய்வதற்ககாக  கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு  இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழ் நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்றார். அதன்பின்னர், பழைய பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள மயானத்தில் டிஐஜி விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன இளைஞர் தயாரின் செக்ஸ் அடிமையாக இருந்ததாக தகவல்