Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க என்ன இயேசுவை சுட்ட கோட்சே வாரிசா? – குழப்பிவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:48 IST)
அதிமுகவின் திட்டங்களை திமுக தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் ஜனவரியில் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க முதல்வர் அறிவித்துள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் இதே திமுக முன்னர் ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு பணம் வழங்கியது. நாங்கள் என்ன இயேசுவை சுட்ட கோட்சேவா?” என பேசியுள்ளார். காந்தி என்பதற்கு பதிலாக இயேசு என அமைச்சர் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments