Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

Siva
ஞாயிறு, 11 மே 2025 (09:52 IST)
ராணுவ வீரர்கள் எல்லையில் போய் சண்டை போட்டார்களா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டும் என்றும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்றும் பேசிய அவர், ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் போய் சண்டையா போட்டார்கள்? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் மத்திய அரசுதான் வாங்கி கொடுத்தது, அதாவது மோடி தான் வாங்கி கொடுத்தார், எனவே திமுகவினர் பிரதமர் மோடியை தான் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
அவரது பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
இன்று நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பில்  இரவு பகல் பார்க்காமல்  நாட்டுக்காக பாடுபடும்  நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசிய  தாக வந்துள்ள செய்திகள் தவறு , எங்க   பொதுச் செயலாளர்  அண்ணன் EPS  பாராட்டியுள்ளார் ,எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது  இன்று நேற்று நாளை எப்பொழுதும் நான் ராணுவத்தை மதிக்கிறேன் !!! என செல்லூர் ராஜூ எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

ஆகஸ்ட் 1 முதல் சில ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் செயல்படாது.. இந்த பட்டியலில் உங்கள் போன் இருக்கிறதா?

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments