Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்தித்த தினகரன் - புதிய கட்சியின் பெயர் முடிவாகுமா?

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (16:28 IST)
பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 
 
ஆர்.கே நகர் நகர் தொகுதி எம்ஏல்ஏ தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.எனவே தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 
 
அந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், அவரது கட்சிக்கு அனைத்திந்திய அம்மா அண்ணா திமுக, எம்ஜிஆர் திமுக, எம்ஜிஆர் அம்மா திக என அவர் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஒன்றை வைக்க அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்தது தினகரன் வரும் வியாழக்கிழமை மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார்.  
 
இந்நிலையில், இன்று அவர் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments