Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்தர்களுக்கு அனுமதியின்றி திறக்கப்பட்டது சொர்க்கவாசல்!

Advertiesment
சொர்க்கவாசல்
, வியாழன், 13 ஜனவரி 2022 (07:20 IST)
பக்தர்களுக்கு அனுமதியின்றி திறக்கப்பட்டது சொர்க்கவாசல்!
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஆனாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
 
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, ஆனால் அதே நேரத்தில் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என பார்த்தசாரதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருப்பதி உள்ளிட்ட பல முக்கிய பெருமாள் கோவில்களிலும் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போகி பண்டிகையை வரவேற்கும் தமிழர்கள்: பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டம்!