Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நாங்கள் வாக்களிக்கமாட்டோம்”.. தேர்தலை புறக்கணித்தனர் தேவேந்திரகுல வேளாளர்கள்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (12:18 IST)
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமுதாய மக்கள் இடைத்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன் படி, நாங்குநேரி கீழப்பாட்டம் பகுதியில் உள்ள தேவேந்திர குல சமூகத்தினர் ஓட்டுபோடவில்லை என தெரியவருகிறது. மேலும் அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி ஆகிய பகுதிகளில் அச்சமூக மக்கள் ஓட்டுபோடவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் களக்காடு, தருவை ஆகிய பகுதிகளில் பெருமளவு தேவேந்திர குல சமுதாயத்தினர் ஓட்டு போட்டதாகவும் தெரியவருகிறது. இதனால் நாங்குநேரி பகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மிகவும் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டியல் இனத்திலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி நாங்குநேரி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments