Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் கும்பாபிஷேகம் -கே.சி. பழனிசாமி

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (17:24 IST)
மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை மீட்க வேண்டும். ஒவ்வொரு கோவிலையும் அந்தந்த பகுதியில் உள்ள மக்களை வைத்து குழு அமைத்து நிர்வகித்து கொள்ளலாம் அல்லது மத அமைப்புகள் மூலம் நிர்வகித்து கொள்ளலாம் என்று  அண்ணாமலை
 போராடுகிறார்.

ஆனால் மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா?

அண்ணாமலை தெரியாமல் பேசுகிறாரா? அல்லது பிரதமர் மோடி அண்ணாமலை கருத்திற்கு எதிராக செயல்படுகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments