தேனியில் இருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ்: அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (07:44 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை உச்சக்கட்டத்தில் உள்ளது 
 
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இது குறித்து காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர் என்பதும், உச்சகட்டமாக சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இதுகுறித்து வாதம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தேனி சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ், அங்கு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் 
 
இந்த நிலையில் இன்று அவர் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பிய உடன் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் நாளை அறிவிக்கப்பட உள்ள முதல்வர் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆனால் அதிமுக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது நாளை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வராது என்றும் அப்படியே வந்தாலும் ஈபிஎஸ் பெயர்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து வருவதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

அடுத்த கட்டுரையில்
Show comments