Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியா நுழைவுக்கான மணியோசை: பாஜக வெற்றிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (14:19 IST)
நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றது. சற்றுமுன் வரை 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கைக்கு இன்னும் 6 தொகுதிகள் மட்டுமே தேவை. எனவே பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பில்லை என்று கூற முடியாது.
 
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பாஜகவின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள ஓபிஎஸ், அதன் பின்னர் கூறியதுதான் ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.
 
தென்னிந்தியாவில் பிரம்மாண்ட நுழைவிற்கான மணியோசை போல் கர்நாடகாவில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துகிறேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவிப்பதுபோல் இந்த கருத்து இருப்பதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. மோடியா? லேடியா? என ஜெயலலிதா இருந்த போது பாஜகவுக்கு எதிராக இருந்த அதிமுக, தற்போது முழு அளவில் பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments