Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி...?

Advertiesment
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி...?
, செவ்வாய், 15 மார்ச் 2022 (15:33 IST)
வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல். 

 
பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால், எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான  அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 15, 16, 17 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்!