Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (11:20 IST)
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திலும் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் இன்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments