Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (11:20 IST)
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திலும் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் இன்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனாமி போல உள்புகுந்த கடல்நீர்! திடீரென வெள்ளத்தில் மூழ்கிய எர்ணாக்குளம்! - அதிர்ச்சி வீடியோ!

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் அடித்து கொலை.. மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஏர் இந்தியா விமானம் செல்லும் வழியில் வெடித்து சிதறிய எரிமலை! மீண்டும் டெல்லிக்கு திரும்பியது!

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments