Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் டெங்கு அறிகுறி: மக்கள் பீதி

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:31 IST)
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தெரிகிறது. இந்நிலையில் மதுரை பேரையூரில் பஞ்சவர்ணம், சித்ரா ஆகிய இருவரும், கே.புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் டெங்கு அறிகுறியுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் விருதுநகர் காரியாப்பட்டியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண்ணும், திருச்சுழியை சேர்ந்த நாகராஜன் என்பவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னையில் மூவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததாக செய்திகள் வெளியாகின.மேலும் டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments