Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பரை புகழ்ந்தா போதுமா? சிலை ஒன்னு வைங்க! – பிரதமருக்கு கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:18 IST)
நேற்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கம்பர் குறித்து பிரதமர் பேசிய நிலையில் கம்பருக்கு சிலை எழுப்ப கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நட்டு வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல உலகில் பல்வேறு ராமாயணங்கள் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் என்பவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “ராமயணத்தில் வால்மீகி ராமரை சிறந்த மனிதர் என்ற அளவிலேயே புகழ்ந்திருந்தார். ஆனால் கம்பரோ ராமரை பெரும் லட்சிய மனிதராக போற்றியுள்ளார். எனவே மகாகவி கம்பருக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை அவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும்”என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments