கம்பரை புகழ்ந்தா போதுமா? சிலை ஒன்னு வைங்க! – பிரதமருக்கு கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:18 IST)
நேற்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கம்பர் குறித்து பிரதமர் பேசிய நிலையில் கம்பருக்கு சிலை எழுப்ப கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நட்டு வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல உலகில் பல்வேறு ராமாயணங்கள் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் என்பவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “ராமயணத்தில் வால்மீகி ராமரை சிறந்த மனிதர் என்ற அளவிலேயே புகழ்ந்திருந்தார். ஆனால் கம்பரோ ராமரை பெரும் லட்சிய மனிதராக போற்றியுள்ளார். எனவே மகாகவி கம்பருக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை அவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும்”என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments