ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கை: ஆட்டோ டிரைவர்கள் 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 மார்ச் 2025 (09:14 IST)

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர் கூட்டமைப்பு ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக சென்னை - செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்டோ சங்கங்ஜ்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25ம் நிர்ணயித்து பரிந்துரை வழங்கியது. ஆனால் ஓலா ஊபர் உள்ளிட்ட ஆப் நிறுவனங்கள் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.

 

இந்த நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆணையிடவும், அரே ஒரு ஆட்டோ புக்கிங் செயலியை தொடங்கவும் வலியுறுத்தி 19ம் தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments