Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளவுத்துறை என சொல்லி கதிர் ஆனந்தை மிரட்டியது யார்? டில்லி போலிஸார் விசாரணை!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (10:20 IST)
திமுக எம்பியான கதிர் ஆனந்த் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த போது தன்னை உளவுத்துறை அதிகாரிகள் என சொல்லிக்கொண்டு சிலர் வந்து சந்தித்ததாக புகார் அளித்திருந்தார்.

திமுக வின் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் ஆகிய கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் தன்னை சிலர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகார் மனுவில் ‘நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரைக் குற்றச்சாட்டை அடுத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதுபற்றி டெல்லி போலிஸாரிடமும் அவர் புகாரளிக்க, இப்போது அதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளது டெல்லி போலிஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments