தீபா ஆதரவாளர் தொடங்கிய புதிய கட்சி அதிமமுக

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (17:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக உடைந்து பல கட்சிகளாக உருவெடுத்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிட்டாலும் டிடிவி தினகரன் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் தற்போது திவாகரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஒரு கட்சியும், அவரது கணவர் ஒரு கட்சியும் தனித்தனியாக ஆரம்பித்தனர். இந்த நிலையில் தீபாவின் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்த பசும்பொன் பாண்டியன் என்பவர் இன்று புதியதாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சியின் பெயர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ஆகும். இந்த கட்சியை சுருக்கமாக அதிமமுக என்று அழைக்கப்படுகிறது.
 
இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை அறிமுகம் செய்த பசும்பொன் பாண்டியன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''எடப்பாடியின் அரசு பி.ஜே.பி-யின் வழியில் செல்வதால் திராவிட சிந்தனையுள்ள, தமிழ் பற்றுள்ள, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி வந்த தொண்டர்கள் தவித்துப்போயுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து உண்மையான அ.தி.மு.க இதுதான் என்பதைக் காட்டுவதற்காக இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இக்கட்சியின் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும்'' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments