Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?: ஏகப்பட்ட குளறுபடிகள்!

தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?: ஏகப்பட்ட குளறுபடிகள்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (12:37 IST)
ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா போட்டியிடுவதாக அறிவித்து நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வருகின்றன.


 
 
வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனையடுத்து நேற்று மதியம் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
தீபா தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் உள்ளதாக தற்போது உறுதிசெய்யப்படாத தகவல்கள் வருகின்றன. தீபா வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. தனது சொத்து மதிப்பு விபரமும் குறிப்பிடவில்லை.
 
மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடும் தீபா பேரவையின் பதிவு எண்ணையும் அதில் குறிப்பிடவில்லை. காரணம் பேரவையை இதுவரை பதிவு செய்யவில்லையாம். இன்னும் சில காரணங்களுக்காக தீபாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments