Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டித் தீர்த்து 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் - பெங்களூர் சிறையில் சசிகலா அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (12:05 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை திட்டி  ஏராளமான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


 

 
சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரம், பெங்களூரு - 560100 என்ற முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பட்டுள்ளன என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
அந்த கடிதங்களில் சசிகலாவை திட்டி தீர்த்தும், சபித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலிருந்துதான் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஜெயலலிதா உயிரிழக்க சசிகலாதான் காரணம் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் ஜெ மரணமைடயவில்லை. சசிகலா ஒரு துரோகி என்கிற ரீதியில் ஏராளமான கடிதங்கள் சென்றுள்ளனவாம். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிப்ரவரி 15ம் தேதி முதலே கடிதங்கள் வரத் தொடங்கிவிட்டன என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தொடக்கத்தில் அந்த கடிதங்களை சசிகலாவே படித்து வந்தார் எனவும், தற்போது இளவரசி அந்த கடிதங்களை கிழித்து விட்டு, மீதிக் கடிதங்களை மட்டுமே அவரிடம் கொடுக்கிறாராம் என்பதும் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments