Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டன் செல்ல இருக்கும் ஜெ.தீபா: தொண்டர்கள் உற்சாகம்!

போயஸ் கார்டன் செல்ல இருக்கும் ஜெ.தீபா: தொண்டர்கள் உற்சாகம்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (10:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.


 
 
ஜெயலலிதா அவரது தாய் சந்தியாவுடன் சேர்ந்து போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வாங்கினார். பின்னர் அவர் தனது தோழி சசிகலாவுடன் அந்த வீட்டில் பல ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னரும் அவரது தோழி சசிகலா போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தின் உண்மையான வாரிசு தான் தான் என கூறிவந்தார். அது எனது பாட்டி சந்தியா வாங்கிய சொத்து. அதன் வாரிசு நான் தான். அதில் இருக்க சசிகலாவுக்கு உரிமை இல்லை என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தீபாவின் வீட்டின் முன்னர் ஏராளமான அதிமுகவினர் தினமும் கூடி வருகின்றனர். அவர்கள் மத்தியில் அடிக்கடி தீபாவும் பேசி வருகிறார். நேற்று முன்தினம் தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபாவிடம் கூட்டத்தில் இருந்த ஒரு தொடர் உரத்த குரலில் எப்போது போயஸ் கார்டன் செல்வீர்கள் என கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த ஜெ.தீபா, நான் போயஸ் கார்டனுக்கு செல்வது தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார். இதனையடுத்து தீபா ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்ல தயாராக இருப்பதால் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவின் ஒரு பிரிவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்