Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: பிரபல தயாரிப்பாளரின் மனைவி ஆவேசம்!!!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (12:23 IST)
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்காமல் அதற்கும் மேலாக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது.
 
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கொடூரத்தை செய்தவன்களுக்கு மரண தண்டனை கொடுக்காமல், அவன்களுக்கு ஆண்மையை நீக்கி அவன்களை குருடாக்கி, தனியறையில் அடைத்து பைத்தியக்காரன்களை போல் திரிய வைக்க வேண்டும் என ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்