தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம்:நடந்தது என்ன?

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (16:32 IST)
திருவள்ளூர் அருகே தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

இவர் நேற்று மாலை திருவள்ளூரிலுள்ள ஒரு திரையரங்கில் புதிதாக திரைக்கு வந்த “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற திரைப்படத்தை பார்த்துகொண்டிருந்தார்.

படம் முடிந்த நிலையில் அனைவரும் வெளியே சென்றனர். ஆனால் நரசிம்மன் மட்டும் இருக்கையிலேயே உட்கார்ந்திருந்தார்.

இதனை கவனித்த தியேட்டர் ஊழியர்கள், நரசிம்மன் அருகில் சென்று எழுப்ப முயற்சித்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நரசிம்மனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நரசிம்மனை பரிசோதனை செய்த டாக்டர், நரசிம்மன் மாரடைப்பில் இறந்ததாக கூறினார். இதனை குறித்து திருவள்ளூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments