Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

Advertiesment

Siva

, புதன், 16 ஏப்ரல் 2025 (07:32 IST)
மாமியார் கொடுமை அத்துமீறியதால் மருமகள் ஆள் வைத்து மாமியாரை தாக்கிய சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை அருகே வசந்தி என்பவரை அவருடைய மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வசந்தி, தனது மாமன் மகன் மூலம் மாமியாரை பழிவாங்க திட்டமிட்டார்.

இதனை அடுத்து மாமன் மகன், வசந்தியின்  மாமியார் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தாக்கி அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையையும் பறித்ததோடு சரமாரியாக தாக்கினார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது மாமியார் உடனான தகராறு காரணமாக மருமகள் வசந்தி தான் ஆள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டது அம்பலமானது. மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால் அவரை பழி வாங்க மாமன் மகன் மூலம் இவ்வாறு செய்ததாக மருமகள் வசந்தி வாக்குமூலம் அழைத்தார்.

இதனை அடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார், வசந்தி மற்றும் அவரது மாமன் மகன் மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!