Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை கொண்டுவரப்பட்ட சிறுமி ஹாசினி கொலையாளி...

சென்னை கொண்டுவரப்பட்ட சிறுமி ஹாசினி கொலையாளி...
, ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:31 IST)
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த, பணம் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிய நிலையில் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் சென்னைக்கு வரப்படுவான் என்று கூறப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக செய்தி வெளியானது.
 
அதனையடுத்து மும்பை பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பியதாகவும், மீண்டும் தஷ்வந்தை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாந்து. 
 
மேலும், தப்பி ஓடிய இடத்திலிருந்து சிறிய தொலைவில் அவன் மீண்டும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தமிழக போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். 
 
டிசம்பர் 12 ஆம் தேதி போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர் படுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுக்கு 5, அதிமுகவுக்கு 4 , திமுகவுக்கு 3: இதில் கூட தினகரனுக்கே அதிகம்