Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரில் அலப்பறை.. ஊழியர் மீது தாக்குதல்! – டாடி ஆறுமுகத்தின் மகன் தலைமறைவு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:54 IST)
யூட்யூப் பிரபல டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் பார் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூட்யூபில் சமையல் சேனல் நடத்தி அதன்மூலம் பெரும் புகழை அடைந்தவர் டாடி ஆறுமுகம். இவரது பெயரில் அவரது மகன் கோபிநாத் அரியலூரில் மூன்று இடங்கலில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று அங்குள்ள தனியார் பாரில் மது அருந்தியுள்ளார். பார் மூடும் நேரம் வந்தபோதும் கூட தொடர்ந்து மது வழங்குமாறு பாரில் பணிபுரிந்த ஜார்ஜஸ் சினாஸ் என்பவரை கோபிநாத் மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் ஊழியர் மறுத்த நிலையில் கோபிநாத் மற்றும் நண்பர்கள் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், பாரின் சேர், மேசை போன்றவற்றையும் உடைத்ததாக பார் ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தலைமறைவாகியுள்ளதாகவும், போலீஸார் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments