Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரில் அலப்பறை.. ஊழியர் மீது தாக்குதல்! – டாடி ஆறுமுகத்தின் மகன் தலைமறைவு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:54 IST)
யூட்யூப் பிரபல டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் பார் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூட்யூபில் சமையல் சேனல் நடத்தி அதன்மூலம் பெரும் புகழை அடைந்தவர் டாடி ஆறுமுகம். இவரது பெயரில் அவரது மகன் கோபிநாத் அரியலூரில் மூன்று இடங்கலில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று அங்குள்ள தனியார் பாரில் மது அருந்தியுள்ளார். பார் மூடும் நேரம் வந்தபோதும் கூட தொடர்ந்து மது வழங்குமாறு பாரில் பணிபுரிந்த ஜார்ஜஸ் சினாஸ் என்பவரை கோபிநாத் மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் ஊழியர் மறுத்த நிலையில் கோபிநாத் மற்றும் நண்பர்கள் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், பாரின் சேர், மேசை போன்றவற்றையும் உடைத்ததாக பார் ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தலைமறைவாகியுள்ளதாகவும், போலீஸார் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments