Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

Siva
திங்கள், 19 மே 2025 (09:04 IST)
அரபிக் கடலில் மே 22ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேல் சுழற்சி அமைப்பின் தாக்கமாக ஏற்பட்டதாகவும், அதே பகுதியிலேயே புயல்சின்னமாக வலுப்பெற்று, வடக்கே நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதேபோல் மழைக்கால சூழ்நிலை காணப்படும்.
 
மே 19ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். அதேபோல், மே 20ம் தேதி  வேலூர், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
 
நேற்று ஓகேனக்கலில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்ட பஞ்சப்பட்டியில் 100 மிமீ, நாமக்கலின் புதுச்சத்திரம், திருப்பத்தூரின் வாணியம்பாடியில் 90 மிமீ, பந்தலூரில் 80 மிமீ மழை பெய்தது.
 
மழையின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறைந்துள்ளதாகவும், பல இடங்களில் வெப்பநிலை சாதாரணத்தை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments