Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 28 நவம்பர் 2024 (10:58 IST)
வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மேலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு பதிலாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டு இருந்ததாகவும், அதன் பிறகு மிகவும் மெதுவாக, அதாவது இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே, நவம்பர் 30 அல்லது அதற்கு மேல் தான் கரையை கடக்கும் அல்லது கரையை கடக்கும் முன்பே வலு குன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments