Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Mahendran
சனி, 30 நவம்பர் 2024 (14:12 IST)
வங்க கடலில் உருவான புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், நாளை தான் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்க கடலில் நேற்று வலுப்பெற்ற புயல், இன்று மதியம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், புயல் கரையை கடக்க தாமதம் ஆகி வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஃபென்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments