Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Mahendran
சனி, 30 நவம்பர் 2024 (14:12 IST)
வங்க கடலில் உருவான புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், நாளை தான் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்க கடலில் நேற்று வலுப்பெற்ற புயல், இன்று மதியம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், புயல் கரையை கடக்க தாமதம் ஆகி வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஃபென்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments