Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

Mahendran
செவ்வாய், 26 நவம்பர் 2024 (16:38 IST)
வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் என்ற புயல், எப்போது மற்றும் எங்கு கரையை கடக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல், வலுவடைந்து 29ஆம் தேதி வரை கடற்கரைக்கு இணையாக 150 முதல் 250 கிலோமீட்டர் தொலைவில் நகரும் என்று அவர் கூறினார். தற்போது புயல், சுமார் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், நாளை புயலாக வலுவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது, திரிகோணமலையிலிருந்து தென்கே தென்கிழக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் மற்றும் சென்னை தெற்கு தென்கிழக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக புயல் வலுவடையும் என்றாலும், எப்போது மற்றும் எங்கு கரையை கடக்கும் என்பது இதுவரை உறுதியாக கணிக்க முடியவில்லை என்றும் 29ஆம் தேதிக்கு பின்னரே புயலின் தன்மை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments