Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (16:27 IST)
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

எனவே மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதையடுத்து,  சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி  மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுத்து பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாவது:

‘’தேவையான பணியாளர்கள்,24 மணி  நேரமும் இருக்க வேண்டும். அரசரகால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில்  இருக்க வேண்டும்.  நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில், இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான நீர், உணவு வழங்க வேண்டும். ஆரம்பகால சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும், சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள், ஜெனரேட்டர்கள் தயார்  நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.

 மிக்ஜாம் புயல் டிசம்பர் 4 ஆம் தேதி கரையை நெருங்கி வரும் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி  ஆந்திர கடற்கரையோரம் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments