Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை நெருங்கும் புயல்? சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கா...?

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (12:18 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 
 
ஆனால் தற்போது தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட விரிவான தகவல்கள் பின்வருமாறு, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 28 ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கை நோக்கி நகர்கிறது. தற்போது தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது. எனவே, இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயல் வர வாய்ப்பிருக்கிறது. 
 
காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலைபாடு குறித்த உறுதியான தகவல் 25 ஆம் தேதிக்கு பின்னர்தான் கணிப்படும். அப்படி, தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments