Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதி மகள் குறித்த சர்ச்சை பதிவு! – விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் போலீஸார்!

விஜய்சேதுபதி மகள் குறித்த சர்ச்சை பதிவு! – விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் போலீஸார்!
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:20 IST)
விஜய் சேதுபதியின் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஈழ எதிர்ப்பு மனநிலை கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

முன்னதாக சிலர் விஜய் சேதுபதியை விலக கோரி வலியுறுத்தி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் அவதூறாக பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவதூறாக பதிவிட்ட நபர் குறித்த தகவல்களை சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருவதாகவும், விரைவில் அவதூறாக பேசிய நபர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளின் செயல்! – விஜய் சேதுபதிக்கு கனிமொழி ஆதரவு