உங்களுக்கு கார் பரிசா குடுக்குறோம் சார்! – போலீஸுக்கே விபூதி அடிக்க பார்த்த மோசடி கும்பல்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (08:35 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கார் பரிசு விழுந்திருப்பதாக பணம் மோசடி செய்ய கும்பல் ஒன்று முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் குரு. ஆன்லைன் தளங்களில் அடிக்கடி பொருள் வாங்கும் குரு கொரோனா காலத்தில் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களையும் ஆன்லைனில் வாங்கி வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மோசடி கும்பல் ஒன்று குருவுக்கு கால் செய்துள்ளது.

அதில் பேசிய பெண் “தாங்கள் ஆன்லைனில் அதிகமாக விலை உயர்ந்த பொருட்கள் வாங்கியதற்காக உங்களுக்கு 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து டெலிவரி செய்யப்படும். காருக்கு சாலை வரி, சேவை வரி உள்ளிட்டவற்றிற்காக ரூ.6 ஆயிரம் மட்டும் கட்ட வேண்டும். அது தொடர்பான வங்கி விவரங்களை உங்களுக்கு மெசேஜில் அனுப்புகிறோம்” என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் அதை நம்பினாலும், பிறகு ரூ.6 ஆயிரம் கேட்பதால் யோசித்த குரு இது குறித்து தனது நண்பரும், கேணிக்கரை காவல் அதிகாரியுமான குகனேஸ்வரன் என்பவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். கால் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டுள்ளார் குகனேஸ்வரன். அதற்கு குகனேஸ்வரனுக்கும் பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி ரூ.6 ஆயிரம் கேட்டுள்ளார்கள். உடனே குகனேஸ்வரன் தான் ஒரு போலீஸ் அதிகாரி என சொல்லவும் அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து குரு அளித்த புகாரின் பேரில் அந்த மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்து மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments