Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெக் பீஸ் இல்லாமலா சிக்கன் பிரியாணி தருவ?! – சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (13:35 IST)
சென்னை பூந்தமல்லி அருகே சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரத்தில் கடை ஊழியரை வாடிக்கையாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே கரையான்சாவடி அருகே பிரபலமான அசைவ உணவகம் உள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். பிரியாணியில் லெக் பீஸ் இல்லாமல் சாதாரண கறி மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பருடன் உணவகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த சப்ளையர் ஒருவரையும் சரமாறியாக அறைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாடிக்கையாளர் தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் புகார் அளித்துள்ளார். வாடிக்கையாளர் ஊழியரை அறையும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments