Publish Date: Mon, 07 Mar 2022 (22:09 IST)
Updated Date: Mon, 07 Mar 2022 (22:13 IST)
மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்தப் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் படித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.