Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: கடலூரில் பரபரப்பு

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (15:01 IST)
கடலூரில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூரில் ஆயுதப்படை போலீஸாக பணிபுரிபவர் கவிதா. இவர் தனது கணவர் சத்தியசீலனுடன் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது கணவரும் ஆயுதப்படை போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கவிதா இன்று காலை வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் திடீரென விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து, அவரை அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக கவிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments