Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு நோயாளிக்கு ஆக்ஸிஜன் அளித்ததால் ராஜா மரணமா? – சர்ச்சைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (14:44 IST)
கடலூரில் ஆக்ஸிஜன் பெற்று வந்த நோயாளியிடமிருந்து எடுத்து வேறு நோயாளிக்கு தந்ததால் அவர் இறந்ததாக வெளியான சர்ச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கடலூரில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்கனவே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருந்த ராஜா என்ற நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் எந்திரத்தை எடுத்து சென்றதாகவும், அதனால் ராஜா உயிரிழந்ததாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்த விரிவான விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மணிகண்டன் என்ற நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது ராஜா தனது ஆக்ஸிஜன் முக கவசத்தை கழற்றி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார் எனவும், அப்போது மணிகண்டனுக்கு வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் எந்திரத்தின் பின் சரியா பொருந்தாததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜாவின் ஆக்ஸிஜன் எந்திரத்தை மணிகண்டன் உயிரை காக்க அளித்து விட்டு, அங்கிருந்த ஆக்ஸிஜன் எந்திரத்தை ராஜாவுக்காக பொருத்தி தயார் செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் சாப்பிட்டு கொண்டிருந்தபோதே ராஜா மாரடைப்பால் இறந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments