Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி வரி செலுத்தாததால் கல்லூரி அலுவலகத்திற்கு சீல்.. கடலூரில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 12 மார்ச் 2024 (14:21 IST)
கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கல்லூரி மாநகராட்சி வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.36 லட்சம் வரியை கட்டவில்லை என தெரிகிறது. வரி பாக்கியால் மாநகராட்சி அதிகாரிகள்  கல்லூரி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
 
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் இந்த கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் வரி பாக்கிக்காக கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு சீல் அதிகாரிகள் வைத்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகளும், செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் கல்லூரி அலுவலகம் சீல்  ஊழியர்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments