மாநகராட்சி வரி செலுத்தாததால் கல்லூரி அலுவலகத்திற்கு சீல்.. கடலூரில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 12 மார்ச் 2024 (14:21 IST)
கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கல்லூரி மாநகராட்சி வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.36 லட்சம் வரியை கட்டவில்லை என தெரிகிறது. வரி பாக்கியால் மாநகராட்சி அதிகாரிகள்  கல்லூரி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
 
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் இந்த கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் வரி பாக்கிக்காக கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு சீல் அதிகாரிகள் வைத்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகளும், செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் கல்லூரி அலுவலகம் சீல்  ஊழியர்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments