Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

106 வயதான ரிப்பன் கட்டிடத்தில் விரிசல் – காரணம் மெட்ரோ ரயிலா ?

106 வயதான ரிப்பன் கட்டிடத்தில் விரிசல் – காரணம் மெட்ரோ ரயிலா ?
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:46 IST)
புராதனமான ரிப்பன் கட்டிடத்தில் விழுந்துள்ளது சிலைக்கு அருகில் நடைபெறும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்தான் காரணம் என கூறப்படுகிறது.

சென்னையின் புராதனமான கட்டிடமான ரிப்பன் கட்டிடத்துக்கு வயது 106.. அந்த கட்டிடத்தில் தற்போது மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகம் அமைந்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் இந்த கட்டிடம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது சென்னைப்பட்டின விரிவாக்கத்தை அடுத்து இந்த கட்டிடம் ரூபாய் 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ளது. இந்த விரிசல் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் உள்ளதாக தெரிகிறது. கட்டிடத்தின் அருகில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பித்ததில் இரு
ந்துதான் இந்த விரிசல் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரிசலை சரிசெய்யும் பணிகளை செய்து புராதன கட்டிடத்தை காக்கவேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கூடிய இஸ்லாமியர்கள்..