Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தஞ்சையில் திமுக கூட்டணியில் விரிசல் – தனித்துப் போட்டியிடும் சிபிஎம் !

தஞ்சையில் திமுக கூட்டணியில் விரிசல் – தனித்துப் போட்டியிடும் சிபிஎம் !
, புதன், 18 டிசம்பர் 2019 (14:59 IST)
தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் தனித்துப் போட்டியிடப் போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்தது சிபிஎம் கட்சி. அதன் பின் வந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்காக சீட்களை விட்டுக்கொடுத்து தேர்தலில் நிற்காமல் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

அதன் பின் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சையில் மட்டும் சிபிஎம் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போதுமான சீட்களை ஒதுக்க மறுப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த விரிசல் இரு கட்சித் தலைமைக்கும் சென்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரங்களுக்கு இடையே சிக்கிய குதிரை ... சாதுர்யமாக மீட்ட நபர் ... வைரல் வீடியோ