Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:25 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்பவரை நியமித்துள்ளது.

மற்ற எல்லாத்துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தாலும், அரசியலில் இன்னும் இந்த நிலையை எட்ட முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என எதிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடப்படும்படியான பதவிகளையோ பொறுப்புகளையோ வகிக்கவில்லை.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்ற கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியை நியமித்துள்ளது. மதுராந்தகத்தில் பிறந்த பாரதி அண்ணா சட்டப்படிப்பை முடித்தவர். கண்பார்வை குறைபாடுகளால் நீண்ட ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்த பாரதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக பார்வையை இழந்தார். இதற்கு முன்னர் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments