Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:25 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்பவரை நியமித்துள்ளது.

மற்ற எல்லாத்துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தாலும், அரசியலில் இன்னும் இந்த நிலையை எட்ட முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என எதிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடப்படும்படியான பதவிகளையோ பொறுப்புகளையோ வகிக்கவில்லை.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்ற கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியை நியமித்துள்ளது. மதுராந்தகத்தில் பிறந்த பாரதி அண்ணா சட்டப்படிப்பை முடித்தவர். கண்பார்வை குறைபாடுகளால் நீண்ட ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்த பாரதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக பார்வையை இழந்தார். இதற்கு முன்னர் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments