தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுனர், இது புதிய வரலாறு: சிபி ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:01 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக இருப்பது புதிய வரலாறு என ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிபி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இல கணேசன் ஆகிய இருவரும் ஏற்கனவே ஆளுநராக இருக்கும் நிலையில் இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
 
தனக்கு ஆளுநர் பதவி கிடைத்தது குறித்து சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது இது எனக்கு கிடைத்த பெருமையாக நான் நினைக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமையாக நினைக்கின்றேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநர் பதவியில் இருப்பது புதிய வரலாறு என்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! தமிழகத்திற்கு கனமழையா?

நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது: பாஜக

இந்த வாரம் முழுவதும் ஏற்றம் தான்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..!

ரூ.82,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டுமா?

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஐடி ரெய்டு.. ராணுவம் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments