Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி பிறந்த இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை!

J.Durai
வியாழன், 17 அக்டோபர் 2024 (18:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஆய்வுப்பணிக்காக நாகை வந்த  அமைச்சர்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு வருகை தந்தார்.
 
அவருக்கு திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தொடர்ந்து  கருணாநிதியின்  தாய் தந்தையான அஞ்சுகம் முத்துவேலர், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.
 
அப்போது  ஆட்சியர் ஆகாஷ் மற்றும்
திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments