Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி பிறந்த இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை!

J.Durai
வியாழன், 17 அக்டோபர் 2024 (18:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஆய்வுப்பணிக்காக நாகை வந்த  அமைச்சர்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு வருகை தந்தார்.
 
அவருக்கு திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தொடர்ந்து  கருணாநிதியின்  தாய் தந்தையான அஞ்சுகம் முத்துவேலர், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.
 
அப்போது  ஆட்சியர் ஆகாஷ் மற்றும்
திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments