Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் பரோல் வழக்கு – மீண்டும் கடுப்பான நீதிபதிகள்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:49 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு மறுத்துள்ளது.

ராஜீவ் கொலையில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார அற்புதம் அம்மாள் தனது டிவிட்டர் அவரது மகனை பரோலில் விடுதலை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்த புழல் சிறைத்துறை ‘பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல நோய்கள் உள்ளன. இந்த நிலையில் அவரை பரோலில் விடுதலை செய்தால் அவருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது’ எனக் கூறி பரோல் விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதைக் கேட்டு அதிருப்தியைடைந்த நீதிபதிகள் ‘சிறைக்கைதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஐசியுவில் இருந்தால்தான் பரோல் கொடூப்பீர்களா?’ என சிறைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வந்த போது பேரறிவாளன் பரோல் சம்மந்தமாக இப்போது இருக்கும் நிலைமையில் உள்துறை செயலர்தான் முடிவெடுக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால்தான் பரோல் வழங்குவீர்களா என அதிருப்தியுடன் கேட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments