Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் விடுவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். 
 
அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் எனவே என்னையும் எனது மனைவியையும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments