Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை கடத்தி சென்று முத்தம்! – இளைஞருக்கு சிறை தண்டனை!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 20 மே 2022 (15:10 IST)
அரியலூரில் சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த இளைஞருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பைக்கில் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்தை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன? ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?