Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (17:00 IST)
சினிமா தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
நாகர்கோவிலை சேர்ந்த நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் என்பவர், நீதிமன்றத்தில் தாணுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். தாணு தனக்கு தரவேண்டிய ரூ.2 லட்சம் பணத்தை இதுவரை திருப்பி தரவில்லை என அவர் கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாணு அப்பணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும், தாணு டேவிட்டிற்கு பணத்தை கொடுக்கவில்லை.
எனவே, இதுபற்றி நாகர்கோவில் நீதிமன்றத்தில் டேவிட் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் கூறியும் பணத்தை கொடுக்காத தாணுவை வருகிற 28ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு