Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தினால் நடவடிக்கை! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (14:27 IST)
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் ஆதாய நோக்கில் டியூசன் நடத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் அல்லது தனியார் டியூசன் செண்டர்களில் மாணவர்களுக்கு பணம் பெற்று டியூசன் நடத்துவது சில இடங்களில் நடக்கிறது. இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று மதுரை கிளை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள் “டியூஷன் சென்டர்கள் மற்றும் வீடுகளில் டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள் தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments