Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யூ டியூப் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்: சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு

savukku shankar

Mahendran

, செவ்வாய், 19 மார்ச் 2024 (13:22 IST)
போதை கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை சவுக்கு சங்கர் தெரிவித்ததாக லைகா நிறுவனம் குறித்து அவதூறு வழக்கை தாக்கல் செய்தது. மேலும் மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும், அவதூறு வீடியோக்களை நீக்க கோரியும் லைகா நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது.
 
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் போதை கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
 
மேலும்  யூ டியூப்பில்  வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
இதனையடுத்து யூ டியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா முக்கிய அப்டேட்..!!